மீனில் வைட்டமின்கள், தாதுஉப்புகள் புரதம், அமினோ அமிலங்கள், என பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது . மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய், ஆஸ்துமா, கண் பாதிப்பு, உள்ளிட்ட பல உடல் பிரச்னைகளை தவிர்க்க முடியும். . இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு.
மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.
அதேபோல், வாழைப்பழத்தையும் பாலுடன் நாம் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் சளி அதிகம் தேங்கும்.
கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின், பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கோடையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் தர்ப்பூசணி. இத்ந பழத்தை சாப்பிட்டட பிறகு பால் குடித்தால், அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.
கோழி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலின் மிக நுண்ணியத் துளைகள் கெட்டு, உடல்நலம் பாதிக்கப்படும்.
Comments
Post a Comment